காடை தம் பிரியாணி

காடை தம் பிரியாணி








தேவையானவை: 

காடை – 4, 

சீரகச் சம்பா அரிசி - 750 கிராம், 

பெரிய வெங்காயம்- 150 கிராம்,

 தக்காளி - 100 கிராம், 

பச்சை மிளகாய் – 5, 

புதினா இலை, 

கொத்தமல்லித்தழை - 50 கிராம், 

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 

தயிர் - 50 மில்லி, 

தேங்காய்ப்பால் - 100 மில்லி, 

பட்டை, ஏலக்காய் – 2, 

கிராம்பு – 4, 

பிரிஞ்சி இலை – ஒன்று, 

இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம், 

உப்பு - தேவையான அளவு, 

எண்ணெய் - 100 மில்லி, 

நெய் - 50 மில்லி.


பிரியாணி மசாலா செய்ய:
 
பட்டை – 2, 
ஏலக்காய் – 4, 
கிராம்பு – 6, 
பூண்டு - 50 கிராம், 
இஞ்சி-1 துண்டு.

செய்முறை: 
சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலாவுக்கு தேவையான பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வறுக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கியதும், அதனுடன் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.
கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு தம் போடவும். 20 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான காடை தம் பிரியாணி தயார்!!

Comments

Popular posts from this blog

மீன் கட்லெட்

மட்டன் தால்சா