காடை தம் பிரியாணி
காடை தம் பிரியாணி தேவையானவை: காடை – 4, சீரகச் சம்பா அரிசி - 750 கிராம், பெரிய வெங்காயம்- 150 கிராம், தக்காளி - 100 கிராம், பச்சை மிளகாய் – 5, புதினா இலை, கொத்தமல்லித்தழை - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், தயிர் - 50 மில்லி, தேங்காய்ப்பால் - 100 மில்லி, பட்டை, ஏலக்காய் – 2, கிராம்பு – 4, பிரிஞ்சி இலை – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 50 மில்லி. பிரியாணி மசாலா செய்ய: பட்டை – 2, ஏலக்காய் – 4, கிராம்பு – 6, பூண்டு - 50 கிராம், இஞ்சி-1 துண்டு. செய்முறை: சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலாவுக்கு தேவையான பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை...